வெள்ளி, 20 நவம்பர், 2015

கப்று வணக்கம்


++++++++++++
யாமறிந்த பித் அத்திலே
இந்த பித் அத் போல்
இழிதாக எங்கும் காணோம்
பாமரத் தனமாக
பலரையும் கூட்டி வைத்து
சாமியைப் போன்று
சாய்ந்து கிடக்கும் கபுறுடைய
பூமியில் விழுகிறார்
புலம்பிப் பாடுகிறார்.
உள்ளே உள்ளவரு
உண்மையில் நல்லவரா
உள்ளத்தை அறிந்தவன்
ஓரிறைவன் மட்டுமே
இல்லாத வழியொன்றை
இஸ்லாத்தில் புகுத்தி
அல்லாஹ்வின் மார்கத்தை
அவமானப் படுத்துகிறார்
எல்லா மொழிகளிலும்
இறைஞ்சுகிறார் கபுறடியில்
உள்ளே உள்ளவர்
உயிரோடு இருக்கையிலே
ஒரு மொழிதான் அறிந்திருந்தார்
உசிரு போனபின்னால்
டியூசன் போனாரா
டிக்‌ஷனறி பார்த்தாரா
எல்லோரும் பேசுவதை
எப்படி அறிகின்றார்.
குறுக்கால சிந்திப்போர்
கூட்டம் சேர்ப்பதற்கும்
சுறுக்காக உழைப்பதற்கும்
சோடித்த வழியாகும்.
சிர்க்கை உண்டாக்கும்
இறையருளை துண்டாக்கும்
இருக்கும் ஈமானை
இல்லாமல் அழித்து விடும்.
(Mohamed Nizous)
Madawala News's photo.

Related Posts:

  • வெயில் கால அம்மை நோய்கள் வெயில் காலம் ஆரம்பித்து வெயிலின் தாக்கத்தால் அம்மை நோய்கள் வருவது கோடை காலத்தில் நிகழும் ஒன்று. வருமுன் காப்பது சிறப்பு என்பதை நினைவில் கொண்ட… Read More
  • NOTA -NONE OF THE ABOVE NOTA -NONE OF THE ABOVE (நோட்டா பட்டம் அனைத்து வாக்கு மிஷின்களிலும் கீழே கடைசியில் இருப்பதால்,மேலே உள்ள அனைத்திற்கும் வாக்கு அளிக்க விருப்பம் இல்லை … Read More
  • ,வரலாறுகளை பொய்யாக ஜோடிக்கிறது. மோடி அரசு ‪#‎இந்துராஷ்ட்ரம்‬ என்னும் பெயரில்‪#‎பிராமணியத்தை‬ நம்மீது திணிக்கிறது,வரலாறுகளை பொய்யாக ஜோடிக்கிறது. சமூக போ… Read More
  • புதுக்கோட்டை அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா ரத்து தேர்தல் நடத்தை விதி: புதுக்கோட்டை அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா ரத்து தேர்தல் ஆணையத்தின் திடீர் அறிவிப்பால் கல்லூரி வாழ்வின் மிக முக்கியமான … Read More
  • தமிழகம் முதலிடம் இந்தியாவில் ஊழல் செய்வதில் தமிழகம் முதலிடம் - தேசிய பொருளாதார ஆய்வு மையமான NCEAR நடத்திய ஆய்வில் தகவல்... # அகில உலகத்துல முதலிடமான்னு ஆ… Read More