புதன், 24 மே, 2017

பிளஸ்-2 வில் 1180 மார்க் எடுத்த மாணவி! பத்திரிக்கையாளர்கள் செய்த காரியத்தால் உயிரையே விட்டார்

கல்விக்கு பெயர் போன கேரளா மாநிலம் கண்ணூரை சார்ந்த மாணி ரப்சீனா பிளஸ்-2 பொதுத்தேர்வில் 98.33 சதவீதம் அதாவது 1180 மதிப்பெண் எடுத்து, பள்ளியில் முதல் இடம் பிடித்தார்.
இந்த தகவல் அறிந்த பத்திரிக்கையாளர்கள் ரப்சீனாவின் குடும்ப சூழ்நிலை, அவரின் கடின உழைப்பு மற்றும் வாழ்கை பற்றி கட்டுரையாக வெளியிட்டனர்.
மல்லூர் நீட்டரம்பம் காலனியில் ஒரே அறையில் ரப்சீனா தனது தாயுடன் வாழ்ந்து வந்தது முதல் தாயார் தினக்கூலி வேலை செய்து அவரை படிக்க வைத்தது என அனைத்தும் கட்டுரையில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை அறிந்து கண்ணூர் எம்.பி தானாக முன்வந்து ரப்சீனாவின் படிப்பிற்கான செலவை தான் ஏற்பதாக அறிவித்தார்.
இந்நிலையில், பத்திரிக்கையில் வெளியான செய்தியின் மூலம் தனது ஏழ்மையான குடும்ப சூழ்நிலை குறித்து தனது பள்ளி நண்பர்களுக்கு தெரிந்துவிட்டது என கருதி மன உளைச்சலுக்கு ஆளான ரப்சீனா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
ரப்சீனாவின் இந்த முடிவு அவரது பள்ளி நண்பர்கள் மட்டுமின்றி கண்ணூர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts: