
நாளை முதல் போலீஸ் ‘ரோபோ’ துபாய் தெருக்களில் ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளது. இந்த போலீஸ் ‘ரோபோ’ , அரபு, ஆங்கிலம் உட்பட ஆறு மொழிகளில் தொடர்பு கொள்ளலாம். ரோபோவின் மார்பின் மீது தொடு திரை (touch screen) மூலமாக மக்கள் அபராதம் செலுத்துவது, மற்றும் தகவல்களைப் பெறுவது போன்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரோபோவின் கண்கள் எதிரில் உள்ளவரின் உணர்வுகள், சைகைகள் கண்டறியும் வகையிலும், முகங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு ஏதுவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் தொடங்கப்பட இருக்கும் இச்சேவையில் முதலில் சுற்றுல்லாத் தளங்களிலும், மால்களிலும் ரோபோக்களின் செயல்திறன் பரிசோதிக்கப்பட உள்ளது. கால்களில் உள்ள சக்கரங்களும், கண்களில் உள்ள கேமரா, மற்றும் ரோபோவிடம் உள்ள வரைபடமும், தடைபடாமல் சரியாக செல்ல உதவுகிறது.
உலகிலேயே முதன்முதலில் இந்த ரோபோ போலீசை அறிமுகப்படுத்துவது, உலகநாடுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியில் முதன்மையான இடத்தைப் பெறும் முயற்சியில் முக்கியமான மைல்கல்லாக அமையும் என படைப்பகுதித் தலைவர் மற்றும் துபாய் காவல் துறையின் நவீன சேவைப் பிரிவின் தலைமை அதிகாரியும் ஆன, காலித் நாசர் அல் ரசூகி தெரிவித்துள்ளார்.
இந்த சோதனை முயற்சி திருப்திகரமாக அமைந்தால் 2030ஆம் ஆண்டிற்குள் காவல்துறையில் 25% வரை ரோபொக்கள் இடம்பெறும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இந்த முறை முழுமை பெறுவதற்கு இன்னும் பலக் கட்டங்களைத் தாண்டிப் போக வேண்டிய உள்ளது.
கூகுள் மற்றும் IBM வாட்சனின் உதவியுடன் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள துபாய், இந்த ரோபோ காவல்துறைக்கு ஆயுதங்கள் ஏதும் வழங்கப்படாது என தெரிவித்துள்ளது. ஆயுதங்களோடு இருக்கும் குற்றவாளியை எதிர்கொள்வது, ரோபோவிற்கு சற்று சவாலாகவே அமைந்தாலும், நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இது ஒரு நல்லத் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.
ரோபோவின் கண்கள் எதிரில் உள்ளவரின் உணர்வுகள், சைகைகள் கண்டறியும் வகையிலும், முகங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு ஏதுவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் தொடங்கப்பட இருக்கும் இச்சேவையில் முதலில் சுற்றுல்லாத் தளங்களிலும், மால்களிலும் ரோபோக்களின் செயல்திறன் பரிசோதிக்கப்பட உள்ளது. கால்களில் உள்ள சக்கரங்களும், கண்களில் உள்ள கேமரா, மற்றும் ரோபோவிடம் உள்ள வரைபடமும், தடைபடாமல் சரியாக செல்ல உதவுகிறது.
உலகிலேயே முதன்முதலில் இந்த ரோபோ போலீசை அறிமுகப்படுத்துவது, உலகநாடுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியில் முதன்மையான இடத்தைப் பெறும் முயற்சியில் முக்கியமான மைல்கல்லாக அமையும் என படைப்பகுதித் தலைவர் மற்றும் துபாய் காவல் துறையின் நவீன சேவைப் பிரிவின் தலைமை அதிகாரியும் ஆன, காலித் நாசர் அல் ரசூகி தெரிவித்துள்ளார்.
இந்த சோதனை முயற்சி திருப்திகரமாக அமைந்தால் 2030ஆம் ஆண்டிற்குள் காவல்துறையில் 25% வரை ரோபொக்கள் இடம்பெறும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இந்த முறை முழுமை பெறுவதற்கு இன்னும் பலக் கட்டங்களைத் தாண்டிப் போக வேண்டிய உள்ளது.
கூகுள் மற்றும் IBM வாட்சனின் உதவியுடன் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள துபாய், இந்த ரோபோ காவல்துறைக்கு ஆயுதங்கள் ஏதும் வழங்கப்படாது என தெரிவித்துள்ளது. ஆயுதங்களோடு இருக்கும் குற்றவாளியை எதிர்கொள்வது, ரோபோவிற்கு சற்று சவாலாகவே அமைந்தாலும், நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இது ஒரு நல்லத் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.