வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 403 கோடி ரூபாயை விடுவித்துள்ள தமிழக அரசு, இந்தத் தொகை ஓரிரு நாளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2015-16ஆம் ஆண்டில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர் பாதிக்கப்பட்டதால், 2 லட்சத்து 96 ஆயிரத்து 550 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக, 403 கோடியே 79 லட்சம் ரூபாய் கணக்கிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மாநில அரசின் பங்காக 168 கோடியே 66 லட்சம் ரூபாய் நிதியை, இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்திற்கு தமிழக அரசு விடுவித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 22 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 96 ஆயிரத்து, 550 விவசாயிகளுக்கான இழப்பீட்டு தொகையாக 403 கோடியே 79 லட்சம் ரூபாய், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தொகை ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2015-16ஆம் ஆண்டில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர் பாதிக்கப்பட்டதால், 2 லட்சத்து 96 ஆயிரத்து 550 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக, 403 கோடியே 79 லட்சம் ரூபாய் கணக்கிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மாநில அரசின் பங்காக 168 கோடியே 66 லட்சம் ரூபாய் நிதியை, இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்திற்கு தமிழக அரசு விடுவித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 22 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 96 ஆயிரத்து, 550 விவசாயிகளுக்கான இழப்பீட்டு தொகையாக 403 கோடியே 79 லட்சம் ரூபாய், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தொகை ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது