
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பெண்கள் மண்டியிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி பெண்கள் மற்றும் பொதுமக்கள் 2-வது கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மண்சோறு சாப்பிடுவது, மரத்தில் தலைகீழாக தொங்குவது, தரையில் புரண்டு அழுவது என பல்வேறு வகையான நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 123வது நாளான இன்று வெற்றிலையில் சூடம் ஏற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.
ஆலங்குடி அருகே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி பெண்கள் மற்றும் பொதுமக்கள் 2-வது கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மண்சோறு சாப்பிடுவது, மரத்தில் தலைகீழாக தொங்குவது, தரையில் புரண்டு அழுவது என பல்வேறு வகையான நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 123வது நாளான இன்று வெற்றிலையில் சூடம் ஏற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.