Home »
» இந்தியாவில் 1% பேரிடம் 73% சொத்துக்கள் - வரலாற்றில் மோசமான பொருளாதார ஏற்றத்தாழ்வு! January 22, 2018
இந்தியாவில் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட செல்வ வளத்தில் 73% சொத்துக்கள் வெறும் 1% உச்சபட்ச கோடீஸ்வரர்களிடம் குவிந்துள்ளதாக ஆக்ஸ்போம் நிறுவனத்தின் பொருளாதார ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் மூலம், நாட்டில் வருமான ஈட்டுவதில் ஏழைகள், பணக்காரர்கள் இடையே மிகமோசமான இடைவெளி உருவாகிவருவது தெரியவந்துள்ளது.இந்த ஆய்வின் மூலம், 67 கோடி பேர் இந்தியாவில் வறுமையான சூழலில் வாழ்வது தெரியவந்துள்ளது. இவர்கள் வெறும் 1% வளர்ச்சியை மட்டுமே கடந்த வருடம் கண்டுள்ளனர்.மேலும், இந்த ஆய்வில் இந்தியாவில் உள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஒரு வருடத்தில் சம்பாதிக்கும் வருமானத்தை ஒரு இந்திய தினக்கூலி சம்பாதிக்க 941 வருடங்கள் ஆகும் என தெரியவந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் உள்ள 1% பெரும்பணக்காரர்களின் சொத்து 20.9 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. இந்த தொகை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கடந்த வருடம் மத்திய அரசு போட்ட பட்ஜெட் தொகை அளவுக்கு நிகரானது என்பது கவனிக்கத்தக்கது. இந்தத்தொகை கடந்த 2016ம் ஆண்டு அதிகரித்த சொத்து அளவைவிட சுமார் 4.89 லட்சம் கோடி அதிகமாகும். இந்தத்தொகை இருந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சுகாதாரம் மற்றும் கல்விக்கான பட்ஜெட் தயாரித்துவிடலாம் என ஆக்ஸ்போம் தெரிவித்துள்ளது.கடந்த ஒரு வருடத்தில் ஈட்டப்பட்ட வருமானம் என்பதைத்தாண்டி இந்தியாவில் உள்ள மொத்த சொத்தில், 73% செல்வவளமான 10% பணக்காரர்களிடம் தான் இருக்கிறது என்றும், 37% இந்திய பெருங்கோடிஸ்வரர்கள் இவற்றை குடும்ப சொத்தாக கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோக்கு சர்வதேச அளவிலும் இருக்கிறது. சர்வதேச அளவில் 2017ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சொத்து/ ஈட்டப்பட்ட வருமானத்தில் 82% சொத்துக்கள் வெறும் 1% உலகப்பணக்காரர்களிடம் உள்ளது. உலக அளவில் சுமார் 370 கோடி பேர் வறுமையில் உள்ளனர். இவர்களின் சொத்து பூஜ்ஜிய சதவீதம் மட்டுமே கடந்த வருடம் உயர்ந்துள்ளது.இந்த நிலையை மாற்றி, இந்தியாவில் பொருளாதாரம் ஈட்டப்படுவதில் உள்ள கடும் வேறுபாடுகளைக் களைய ஆக்ஸ்போம் நிறுவனம் பல அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. அவற்றில், பெருநிறுவனங்களுக்கு வரிவிகிதத்தை அதிகப்படுத்தல், பெருநிறுவன தலைமை அதிகாரிகளின் 60% வரை குறைத்தல் என பல விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆக்ஸ்போம் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் இந்த பொருளாதார ஆய்வைச் செய்துகொண்டிருக்கிறது. இத்தகைய ஆய்வுகள் செய்யப்பட்டு, உலக பொருளாதார சபையில் விவாதிக்கப்பட்ட பின்னரே வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Posts:
திருச்சியில் தந்தை பெரியார் சிலையின் கைத்தடி உடைப்பு! September 24, 2018
திருச்சி சோமரசம்பேட்டையில் தந்தை பெரியாரின் சிலையை சேதப்படுத்திய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் பெரியார… Read More
2009ல் இருந்த புலிகள் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்திய நேபாளம்! September 24, 2018
உலகிலேயே புலிகள் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்திய முதல் நாடு என்ற அந்தஸ்தை நேபாளம் விரைவில் அடைய உள்ளது.கடந்த 2010 நவம்பரில் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்… Read More
ஹிமாச்சலில் கனமழையால் வெள்ளப்பெருக்கு; அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை நீடிக்கும்; நிலச்சரிவு அபாய எச்சரிக்கை! September 24, 2018
கனமழை காரணமாக ஹிமாச்சல் பிரதேசத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்க… Read More
நாஸ்கா கோடுகள் : நீடிக்கும் மர்மம் September 24, 2018
நேர் கோட்டில் ஏதாவது இருந்தால் அதனை பார்த்து பிரம்மிப்படையாதவர்கள் இருக்கமாட்டார்கள். நடுவானில் பறந்துகொண்டிருக்கும்பொழுது மரங்களோ, கட்டடங்களோ … Read More
திருச்சி சோமரசம்பேட்டையில் தந்தை பெரியாரின் சிலையை சேதப்படுத்திய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் பெரியார் சிலையை 1991-ஆம் ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திறந்துவைத்தார். பெரியார் கைத்தடியுடன் நிற்கும் முழு உருவச் சிலையாக இது இருந்துவந்தது. இந்த பெரியார் சிலையில் இருந்த கைத்தடி உடைந்து கிடந்ததைக் கண்ட திராவிடர் கழகத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டுமெனக் கோரியுள்ள அவர்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்துள்ளனர். புறக்காவல் நிலையம் முன்பே நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, சென்னை சிம்சன் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசி அவமதிப்பு செய்ததை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பெரியாரின் சிலையை அவமதிப்பு செயலை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சென்னை அண்ணாசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பெரியார் சிலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைதொடர்ந்து, தந்தை பெரியார் சிலை மீது செருப்பு வீச்சு என்பது அரக்கத்தனமான செயல் எனவும், இதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்தார். மேலும், இதுதொடர்பாக யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஜாதி, மதத்தின் பெயரால் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.
அப்பாவிகளை கைது செய்யும் தமிழக அரசு, லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை கைது செய்யாதது ஏன் என திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எ… Read More