ஞாயிறு, 28 ஜனவரி, 2018

​காவிரிக்கு நிரந்தர தீர்வு: விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய தலைவர்கள் கைது! January 28, 2018

Image

டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கர்நாடக அரசிடம் இருந்து காவிரி நீரை பெற்றுத் தர கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், அனைத்து விவசாய சங்கம் சார்பில் தஞ்சை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. 

மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர். தஞ்சையில், சோழன் விரைவு ரயிலை மறித்து மதிமுக பொதுச் செயலாளர் தலைமையில் ரயில் மறியல் நடைபெற்றது. சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த மறியல் போராட்டத்தை தொடர்ந்து வைகோ உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, காவிரி பிரச்னையில் மத்திய அரசும், கர்நாடக அரசும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் அரசு பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு முழுமையாக திரும்பப் பெற வேண்டுமெனவும் வைகோ வலியுறுத்தினார்.

இதேபோல், திருவாரூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும், திருச்சியில் ரயில் மறியல் செய்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் ஜி.ராமகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர்.

Related Posts:

  • குடியரசு தினம் 67வது குடியரசு தினம் கொண்டாடுகிறோம். ஆனால் இன்னும் பயந்து கொண்டு தகுந்த பாதுகாப்புடன் தான் நம் நாட்டின் மூவர்ணம் பூசிய கொடியை ஏற்ற வேண்டிய சூழல். … Read More
  • சென்னை வெள்ளத்தில் பல உயிர்களை காப்பாற்றிய சென்னை வெள்ளத்தில் பல உயிர்களை காப்பாற்றிய சகோதரர் யூனுஸ் அவர்களுக்கு, வீரதீரச் செயலுக்காக அறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டது. … Read More
  • பெற்றோர்கள் செய்யும் தவறுகள்>> *பிள்ளை தன் தந்தையைப் பார்த்து எனக்கு PHONE வேண்டும் எனக் கேட்டால் தந்தை கேட்கிறார் IPHONE வேண்டுமா?/SAMUNG GALAXY வேண்டுமா? *பெற்றோர்களே! இது ந… Read More
  • "ஜெய் ஹிந்த்" இந்த வார்த்தை. சுகந்திரத்துக்கு முன்பு நடந்த மத கலவரத்தின் போது இந்துக்கள் தங்கள் வெற்றியை கொண்டாட "ஜெய் ஹிந்த்" சொன்னது தான் இந்த வார்த்தை.1924,1935,1947-48ல எல்லா… Read More
  • அரசியல் அரசியல் கற்றுக்கொள்ளுங்கள்... அரசியல் பேசுங்கள்.... ஓட்டு வாங்கும் தேர்தல் அரசியல் வேண்டாம்... அது ஒரு மனிதனின் தனித்தன்மையை இழக்க வைக்கும்..... கொள… Read More