சனி, 27 ஜனவரி, 2018

கழகங்கள் இல்லாத தமிழ்நாடா? ‘ஏய் களவாணிப்பசங்களா...’ - ஸ்டாலின் ஆவேசம்! January 26, 2018

Image

கழகம் இல்லாத தமிழகம் உருவாகும் என்று கூறும் தலைவர்களை, திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார். 

கடலூரில் திமுக சார்பில் மொழிபோர் தியாகிகள் வீரவணக்க பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்தாய்க்கு தற்போது அவமானம் ஏற்பட்டுள்ளது என்றும், விஜயேந்திரர் வருத்தம் தெரிவிக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாகும் நேரம் வந்து விட்டது என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.

மேலும், கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்று பேசப்படுவதைப் பற்றி குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், “ஏய் களவாணிப்பசங்களா...’ என விளித்து எல்லோரும் மேடை போட்டு பேசக்கூடிய நிலையை உருவாக்கியது திராவிட மண் என்றும், அதை மறந்துவிட்டு பேசக்கூடாது என்றும் ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.