வெள்ளி, 19 ஜனவரி, 2018

கவிஞர் வைரமுத்து விவகாரத்தில் பாரதிராஜா பரபரப்பு பேச்சு January 19, 2018

கவிஞர் வைரமுத்து விவகாரத்தில், தங்களை மீண்டும் குற்றப்பரம்பரை ஆக்கிவிடாதீர், என இயக்குநர் பாரதிராஜா கூறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது, அவர் இவ்வாறு கூறினார். அப்போது, ஆண்டாள் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாரதிராஜா, வைரமுத்துவை காரணம் காட்டி, தமிழகத்திற்குள் நுழையும் சிலரின் எண்ணம் நிறைவேறாது என்றார். 

கவிஞர் வைரமுத்து குறித்த பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் கருத்துக்கு, மீண்டும் கண்டனம் தெரிவித்த பாரதிராஜா, அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை கெடுத்து விடாதீர்கள் என்றும் குறிப்பிட்டார். மீண்டும் தங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர் என்று குறிப்பிட்ட பாரதிராஜா, பழையபடி குற்றப்பரம்பரை ஆக்கிவிடாதீர் என்றும் ஆவேசமாக கூறினார்.
Image