புதன், 24 ஜனவரி, 2018

கட்டண உயர்வு அட்டவணையை அனைத்து பேருந்துகளிலும் ஒட்டவேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு




சென்னை: பேருந்து கட்டண உயர்வு அட்டவணையை அனைத்து பேருந்துகளிலும் ஒட்டவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வை எதிர்த்த வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. எல்லா பேருந்துகளிலும் கட்டண அட்டவணை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அரசுப்பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மூன்றாவது நாளாக அவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். 

தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், பழனி, நாமக்கல்லில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். மேலும் தூத்துக்குடி கோபி, புதுக்கோட்டை, வேலூர், காரைக்குடியில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=369898