வெள்ளி, 19 ஜனவரி, 2018

விநோத நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்! January 18, 2018

Image
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விநோத நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் கடந்த 3 ஆண்டுகளில், இரண்டு அடி உயரம் குறைந்துள்ளார். 

ஓமலூர் அடுத்த காமலாபுரம் பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளி ரரேஷ். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரமேஷ் தமது உடலில் மாற்றத்தை உணர்ந்துள்ளார். சில மாதங்களில் உடல் எடை குறைந்ததுடன், உயரமும் குறைந்தது. 

இதுகுறித்து பலமுறை அவர் மருத்துவர்களிடம் அணுகியும் நோயை கண்டறிய முடியவில்லை. 21 வயது வரை தமது உடல்நிலை நன்றாக இருந்ததாகவும், அதன்பிறகு உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார். விநோத நோயை குணப்படுத்த அரசு தமக்கு உதவ வேண்டும் என ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.