சனி, 20 ஜனவரி, 2018

ஆண்டாள் பற்றி உயர்வாக பேசியதை திரித்து கூறிவிட்டதாக கவிஞர் வைரமுத்து வேதனை! January 20, 2018

Image

ஆண்டாள் குறித்து தாம் உயர்வாக பேசியதை, தாழ்வாக கூறியதாக சிலர் திரித்து கூறிவிட்டதாக கவிஞர் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வீடியோ பதிவு வெளியிட்டுள்ள வைரமுத்து, ஆண்டாளை பற்றி மட்டும் நான் கட்டுரை எழுதவில்லை; அவரைப்பற்றி உயர்வாக சொன்னதை தாழ்வாக கூறியதாக திரித்து கூறுவது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஆண்டாள் தமிழச்சி என்பதால், அவர் தமக்கும் தாய் என்றும், ஆணாதிக்கம் நிறைந்த காலத்தில், தனி குரலாக ஒலித்தது ஆண்டாளின் குரல் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தேவதாசி என்பது உயர்ந்த குல பெண்களை குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல் என்று விளக்கமளித்துள்ள வைரமுத்து, பெண் விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்த ஆண்டாளை தரம் தாழ்த்தி பேசுவேனா...? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.