செவ்வாய், 30 ஜனவரி, 2018

​ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட மாணவர்கள்..! January 30, 2018

Image

சென்னை பட்ரவாக்கம் ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டதால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது, மேலும் பொதுமக்கள் பதறி அடித்துக்கொண்டு ஓடினர். 

கொரட்டூர்-அம்பத்தூர் இடையே பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு மின்சார ரயில் நின்றது. அந்த ரயிலில் இருந்த கல்லூரி மாணவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். 

மாணவர்கள் ரயிலில் இருந்து இறங்கி கத்தியுடன் ஓடும் காட்சிகளை அங்கிருந்த ஒருவர் தனது செல்ஃபோனில் படமாக்கியுள்ளார். இதனிடையே போலீசாரின் விசாரணையில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் சென்னை மாநில கல்லூரியைச் சார்ந்த ஜெகதீஸ்வரன், தினேஸ்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் என தெரிய வந்துள்ளது. மேலும் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மோகன் உள்ளிட்ட 4 மாணவர்களையும் போலிசார் தேடி வருகின்றனர்.