சனி, 20 ஜனவரி, 2018

தலித்துகள், இஸ்லாமியர்கள் தவறானவர்கள் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சி” - பா. ரஞ்சித் January 20, 2018

Image

தலித்துகள், மீனவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தவறானவர்கள் என்ற எண்ணத்தை ஊடகங்கள், சினிமா மூலம் மக்கள் மனதில் பதிய வைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக திரைப்பட இயக்குனர் ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழ்ப் பேரவை மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் அரபி மற்றும் இஸ்லாமிய இயல் துறைகளின் சார்பாக தமிழர் திருவிழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ராணி சீதை மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கவிஞர்கள் மணவை முஸ்தபா, கா.மூ.ஷெரீப், நாகூர் ஹனிபா, கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியரை கவுரவிக்கும் வகையில் அவர்களது குடும்பத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டது. 

இவர்களைப் பற்றி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதுரை ஆதினம், அருணன், பத்திரிகையாளர் வீரபாண்டியன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிய திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித், தலித்துகள், மீனவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தவறானவர்கள் என்ற எண்ணத்தை ஊடகங்கள், சினிமா மூலம் மக்கள் மனதில் பதிய வைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார்.