வியாழன், 25 ஜனவரி, 2018

​“தமிழை அவமானப்படுத்துபவர்களை தடுக்க தமிழ் உணர்வாளர்கள் போராடுவார்கள்!” : திருச்சி சிவா January 25, 2018

Image

தாங்கள் தமிழுக்கு எதிரானவர்கள் என்பதை மறைமுகமாக காட்டுவதற்காகவே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது காஞ்சி விஜேந்திர சரஸ்வதி அமர்ந்திருந்ததாக,  திருச்சி சிவா எம்பி., தெரிவித்துள்ளார். 

தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் மொழிக்கு இந்தியின் மூலம் ஆபத்து என்பதை விட, உள்நாட்டிலேயே இப்படி மறைமுகமாக எதிர்ப்பையும், அவமானத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதை தடுக்க  உணர்வுள்ள தமிழர்கள் போராடுவார்கள் என்றும்  திருச்சி சிவா எச்சரிக்கை செய்தார். 

கடந்த 23ம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ் - சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழாவின் போது, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி இளைய சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நிற்காததை அடுத்து சர்ச்சை எழுந்தது. அப்போது, விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாக சங்கரமடம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.