வியாழன், 25 ஜனவரி, 2018

பேருந்து கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம்! January 24, 2018

Image

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்றும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பேருந்து கட்டணத்தை உயர்த்திய, தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். 

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள அரசுக்கல்லூரி மாணவர்கள், 3வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், அரசுக்கலைக்கல்லூரி மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து கட்டண உயர்வால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். 

Related Posts:

  • வெய்யில் காலத்தில் இரு சக்கர வாகனத்தில் வெய்யில் காலத்தில்அரை Tank மட்டுமே பெட்ரோல் நிரப்பவேண்டும்,ஏனெனில் பெட்ரோலில் உள்ள வாயு மூலக்கூறுகள் விரிவடைய இடம் இல்லா விட்டா… Read More
  • Salah time - Pudukkottai Dist Only Read More
  • முக்கண்ணாமலைப்பட்டி மக்களுக்கு ஒரு நற்ச்செய்தி நமதூர் மதினா பள்ளி அருகிள் கேஸ் சிலிண்டர்க்கான மானியம் பெருவதற்க்கான விண்ணப்பம் பூர்த்தி செய்து க… Read More
  • காலாவதியான சமையல் எரிவாயு சிலண்டர்களை வாங்காதீர்கள் ...!! உங்கள் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி (Expiry date) தெரிந்து கொள்ள வேண்டுமா? காலாவதியான கேஸ் சிலிண்டரைப… Read More
  • Money Rate - INR VS Top 10 Currencies   By popularity Currency Unit INR per Unit Units per IN… Read More