வியாழன், 25 ஜனவரி, 2018

பேருந்து கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம்! January 24, 2018

Image

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்றும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பேருந்து கட்டணத்தை உயர்த்திய, தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். 

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள அரசுக்கல்லூரி மாணவர்கள், 3வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், அரசுக்கலைக்கல்லூரி மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து கட்டண உயர்வால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.