புதன், 24 ஆகஸ்ட், 2022

பொதுநல வழக்கு :- _ஒரு பார்வை_

இந்திய அரசியலமைப்பு சாசனம் -1950 IDIAN CONSTITUTION ACT - 1950 கோட்பாடு 226 (1) ன் கீழ் நீதிபேராணை வழக்குகளை தொடுக்கும் உரிமை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கம், மற்றும் அரசு துறை சார்ந்த, நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களை செய்யாமல் விட்டாலோ கடமை தவறிய அரசூழியர்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு நீதி வேண்டி நீதி பேராணை வழக்குகளை பதிவு செய்யலாம்.

WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தாக்கல் செய்யும் மனு தான் ரிட்!

எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்?

பொது நலன் பாதிக்கப்படும் போது, பொது நல வழக்குகள் (Public Interest Litigation) தொடரலாம்.

உதாரணமாக உங்கள் பகுதியில் சாலை மோசமாக இருந்தாலோ அல்லது புதிய சாலை அமைக்க கோரி அந்தப் பகுதியின் அதிகாரத்திற்குட்பட்ட அரசுத்துறைகளுக்கு ஒரு மனு கொடுத்தும், அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், அந்தத் துறைக்கு சாலை அமைக்க உத்தரவு போடச் சொல்லி அரசாங்கத்தைக் கேட்கலாம்.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், கழிவுகள், புகையினால் பொது மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டால் அருகில் இருக்கும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் புகார் செய்யலாம்.

தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் 21.09.2015. நாளிட்ட அரசாணை எண் :99 ன் படி முப்பது நாட்களுக்குள் பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்தந்த துறைகள் நடவடிக்கை எடுக்கச் உத்தரவிடச் சொல்லி, ரிட் மனு தாக்கல் செய்யலாம்.


 பொதுநல வழக்கு :- _ஒரு பார்வை_

பொதுவாக எந்த வழக்கையும் பாதிக்கப்பட்ட ஒருவர் தான் தாக்கல் செய்ய முடியும் .
இதனை சட்டத்தில் Locus standi என்று கூறுவார்கள்.
உங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு வழக்கு பதிவு செய்தால் இதனை பதிவு செய்ய என்ன Locus standi இருக்கிறது என்று கேள்வி எழும்.
ஆனால் பொது நல வழக்கு என வரும்போது -பாதிக்கப்பட்டவர் - தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் வழக்கு தாக்கல் செய்யலாம்.
சில நேரங்களில் - நீங்கள் எந்த விதத்திலும் பாதிக்கபடா விட்டாலும் வழக்கு பதியலாம்
தனி நபர்கள் அல்லது கன்ஸ்யூமர் அமைப்புகள் - சில தொண்டு நிறுவனங்கள் (NGO ) இத்தகைய வழக்குகள் பதிவு செய்கின்றனர்
இந்திய சுதந்திரத்துக்கு பின் - எமர்ஜென்சி காலம் வரை பொது நல வழக்குகள் அதிகம் தாக்கல் செய்யப்படவில்லை
எமேர்ஜன்சி காலத்திற்கு பின் நீதிபதி கிருஷ்ணய்யர் மற்றும் நீதிபதி பகவதி முதன்முதலில் பொது நல வழக்கு ஒன்றை ஏற்று தீர்ப்பு தந்தனர்.
அதன் பின் பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனும் போது தந்தி மற்றும் கடிதங்களை ஏற்று நீதிமன்றம் பொது நல வழக்கை நடத்தியுள்ளது
என்னென்ன காரணங்களுக்காக பொது நல வழக்கு பதிவு செய்யப்படுகிறது ?
பொது மக்களை பாதிக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் இத்தகைய வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம்.
உதாரணமாய் பொது இடத்தில் யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால் பொது நல வழக்கு பதிவு செய்யலாம்.
போலவே நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யும்போது பல நேரங்களில் வழக்கு பதிவு செய்து - அந்த நீர் நிலைகளை காக்க நீதி மன்றங்கள் ஆணை பிறப்பித்துள்ளன
சில இடங்களில் மனிதர்களை கொத்தடிமை போல வேலை வாங்குவார்கள் அந்த நேரங்களில் அதனை காணும் யார் வேண்டுமானாலும் பொது நல வழக்கு தொடரலாம் திருவள்ளூர் அருகே செங்கல் சூளைகளில் பலர் கொத்தடிமையாக வேலை செய்தனர் என்று வழக்கு தொடரப்பட்டு அவர்கள் காப்பற்றப்பட்டதை செய்தி தாள்களில் படித்திருக்கலாம்
சுற்று சூழல் சார்ந்து பல நேரங்களில் இவ்வழக்கு தொடரப்படுகிறது. குறிப்பாக சாயப்பட்டறை கழிவுகள் வெளியேறுவதும் அதனால் நீர் மாசுபடுவதும் தடுக்க பல நேரங்களில் நீதிமன்றங்கள் ஆணை பிறப்பித்துள்ளன.
குழந்தை தொழிலாளர்கள் குறிப்பிட்ட நிறுவனத்தில் பணி புரிவது தெரிந்தாலும் இத்தகைய வழக்கு தொடர முடியும்
தங்கள் தனிப்பட்ட பயனுக்காக - சிலர் வழக்கு தொடர்ந்து, அதனை " பொது நல வழக்கு " என நிறுவ முயன்றால் நீதிமன்றங்கள் வழக்கை தள்ளுபடி செய்வதுடன் - அபராதமும் விதிக்கும் வாய்ப்புண்டு
சொல்ல போனால் - சிலர் இத்தகைய வழக்குகளில் கிடைக்கும் உடனடி புகழை விரும்பி தேவையற்ற பொது நல வழக்குகள் பல பதிவு செய்தனர்.
சுப்ரீம் கோர்ட் அப்போதைய தலைமை நீதிபதி கப்பாடியா இத்தகைய போக்கை கண்டித்ததுடன் - இப்படி தேவையற்ற வழக்கு தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார்.
பிரதமராக இருந்த போது மன்மோகன் சிங் அவர்களும் இப்படி தேவையற்ற வழக்குகள் தொடர்வது பற்றி வருந்தி, இவற்றை தடுக்க ஏதேனும் செய்ய வேண்டும் என்றார்
எந்தெந்த விஷயங்களில் பொது நல வழக்கு தொடரலாம்?
எதற்காக பொது நல வழக்கு தொடர முடியாது?
1. அடிமை தொழிலாளிகளாக (Bonded labour) நடத்தப்படும் போது
2. கவனிப்பாரற்ற குழந்தைகள் சம்பந்தமாக
3. தின கூலிகளாக வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படாத போது
4. சிறையில் கொடுமை படுத்தப்படுவதாக வரப்படும் புகார்கள் குறித்து
5. பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை
6. தாழ்த்தப்பட்டோர் மீது - சக கிராமத்தார் செய்யும் கொடுமைகள்
7. சுற்று சூழல் பாதிக்கப்படும் வழக்குகள்
கீழ்கண்ட விஷயங்களில் பொது நல வழக்கை ஏற்க வேண்டாம் என உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது
1. வீட்டு ஓனர் - குடியிருப்போர் இடையே உள்ள வழக்குகள்
2. பென்ஷன்-கிராஜூவிட்டி சம்பந்தமான வழக்குகள்
3. மருத்துவ, இஞ்சினியரிங் அல்லது பிற கல்லூரி அட்மிஷன் சம்பந்தமாக
4. நீதி மன்றத்தில் வழக்கு தாமதம் ஆகிறது என பதிவு செய்யப்படும் வழக்குகள்
பொது நல வழக்கு யார் பதிவு செய்யலாம்?
யாருக்கு எதிராக பதியலாம் ?
பாதிக்கப்பட்டவர் அல்லது அவர் சார்பாக பிறர் பதிவு செய்யலாம்.
வழக்கு அநேகமாய் மாநில, மத்திய அரசாங்கத்தை எதிர்த்து தான் பதிவு செய்யப்படும். சில நேரங்களில் அரசாங்க அனுமதியுடன் தனியாரை வழக்கில் சேர்க்கலாம்
உதாரணமாக ஒரு நிறுவனம் கழிவுகளை ஆற்றில் கலந்து அதனால் ஆறு மாசுபடுகிறது எனில், அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காத அரசாங்கள் மேல் வழக்கு போட்டுவிட்டு - அந்த நிறுவன இயக்குனர்களை வழக்கில் சேர்க்கலாம்..
பொது நல வழக்கு எங்கு தாக்கல் செய்யபடுகிறது? பிற நடைமுறை விஷயங்கள்?
பொது நல வழக்கு பெரும்பாலும் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
ரிட் பெட்டிஷன் எப்படி தாக்கல் செய்யபடுகிறதோ அதே நடைமுறை தான் இத்தகைய வழக்கிற்கும்.
2 G ஊழல் சம்பந்தமான வழக்கு, ரிசர்வேஷன் சம்பந்தமான மிக முக்கிய தீர்ப்பு, சில பெரிய நிறுவனங்கள் கழிவு நீரை ஆற்றில் கலந்தபோது எடுத்த நடவடிக்கைகள் போன்றவை - இந்தியாவில் நடந்த மிக முக்கியமான பொது நல வழக்குகளாகும்.
நிறைவாக
பொது நல வழக்கு - சாதாரண மனிதர்கள் உரிமை பாதிக்கப்படுகையில் பயன்படும் மிக அற்புத விஷயம்..
அதே நேரம் தேவையற்ற வழக்கு பதிவானால் நீதிபதியின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்
பா.வெ.

Source / Credit : FB/

சட்டம் பற்றிய விளக்கம் மற்றும் ஆலோசனைகள்


இணைய வழி வழக்கு தாக்கல்

இணைய வழி வழக்கு தாக்கல்

இந்தியாவின் உச்ச நீதிமன்றமும், இணையதள நிர்வாகம் மூலமாகத் தனது சேவைகளை இந்தியக் குடிமகன்களின் வீடுகளுக்கே எடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது சம்மந்தமாக அக்டோபர் 2, 1996ஆம் ஆண்டில் உச்சநீதி மன்றம் இணையதளம் மூலமாக வழக்கைத் தாக்கல் செய்யலாம் என்ற நடைமுறையை அமலுக்குக் கொண்டுவந்தது. வீட்டில் இருந்தபடியே வலைதளம் மூலமாக வழக்கு தாக்கல் செய்ய இது மிகவும் எளிய வழியாகும்.

இணையதளம் வலையகம் மூலமாக வழக்கு தாக்கல் செய்ய எந்த வழக்கறிஞரின் உதவியும் தேவையில்லை. இந்தச் சேவையை சாதாரண குடிமகனிலிருந்து, வழக்கறிஞர் வரை யார்வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் எவரும் உச்ச நீதிமன்றம் வலைவாசலில் நுழைந்து,தனது பெயரை, உபயோகிப்பாளர் என்ற பகுதியின் கீழ் பதிவு செய்து கொண்டு, வழக்கு தாக்கல் செய்யலாம்.

வழிமுறைகள்

  1. உச்சநீதிமன்றத்தின் இணையகம் மூலம் முதல் முறையாக வழக்குத் தாக்கல் செய்பவர்கள், தங்களது பெயரை உபயோகிப்பாளர் கையொப்பப் பகுதியில் பதிவுசெய்ய வேண்டும்
  2. இணையகம் மூலமாக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டுமானால், அவர்அதிகாரப்பூர்வமான வழக்கறிஞராகவோ, அல்லது வழக்குத் தொடரும் நபராகவோ மட்டுமே இருக்க வேண்டும்.
  3. நீங்கள் பதிவு பெற்ற வழக்கறிஞராக இருந்தால் மட்டுமே, வழக்கறிஞர் என்றவிருப்பத் தேர்வு இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் வழக்குத் தொடர்பவரே தனது பெயரை அதற்காண இடத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  4. முதல் முறையாகப் பதிவு செய்யும்போது, அவசியமான தகவல்களான,விலாசம், தொடர்பு கொள்ள ஏதுவான விவரங்கள், இணையக மெயில் அடையாளம், போன்றவைகள் பதிவு செய்வது அவசியம்.
  5. தொழில்முறை வழக்கறிஞர் அவரது சங்கேத எண்ணை (பதிவுபெற்ற வழக்கறிஞராக இருந்தால்) இணையதள நுழைவு சொல்லை  குறிப்பிட வேண்டும். தனிநபராக, சொந்தப் பொறுப்பில் வழக்குத் தாக்கல் செய்பவர் அவரது நுழைவு சொல்லை புதிதாக உருவாக்கி நுழைவுக் கட்டத்தில் குறிப்பிட வேண்டும். இதையடுத்து, தேவையான விவரங்கள் பதிவுசெய்யப்பட்டவுடன், நுழைவு சொல் மற்றும் ரகசியகச் சொல் சேர்க்கப்படும்.
  6. இவ்வாறாக வெற்றிகரமாக இணையதளத்தில் நுழைந்தவுடன்,பொறுப்பாகாமை அறிவிப்பு, கணினித் திரையில் தோன்றும்
  7. "இந்த அறிவிப்பின் விவரத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்ற குறியீட்டை   தேர்வு செய்தவுடன், அடுத்த நிலைக்கு செல்லலாம். "இதற்கு நான் ஒப்பவில்லை" என்ற பதிலைத் தேர்வு செய்யும் பட்சத்தில், மறுபடியும் நுழைவு பக்கத்திற்கு சென்று விடும்.
  8. அடுத்த கட்டமாக, உபயோகிப்பாளர், தனது வழக்கின் விவரங்களைக் கணினியில் பதிவுசெய்து, வழக்கு தாக்கல் செய்யலாம்.
  9. 'புதிய வழக்கு’ என்ற விருப்பநிலை குறியீட்டை தேர்வு செய்வதன் மூலம் புதிய வழக்கைத் தாக்கல் செய்ய முடியும்.
  10. திருத்தம்’ என்றே தேர்வுக் குறியீடு உபயோகித்து, ஏற்கனவே தாக்கல்செய்து முடித்த வழக்கு விவரங்களில் மாறுதல்கள் செய்ய முடியும். அதே சமயத்தில் நீதிமன்றக் கட்டணத்தைக் கட்டுவதை துவங்காதவரை  திருத்தங்கள் செய்யலாம்.
  11. நீதி மன்றக் கட்டணம் கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலமாக மட்டுமே செலுத்த முடியும்
  12. கணினி மூலமாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விவரங்களில் தவறுகள் இருப்பின், உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம், சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கோ அல்லது வழக்கைப் பதிவு செய்த தனி நபருக்கோஅவைகளைச் சுட்டிக்காட்டி இ-மெயில் மூலம் அனுப்பப்படும்.
  13. மேலும் உதவி தேவைப்பட்டால் ‘உதவி’ என்கிற விருப்பத் தேர்வுக் குறியீட்டைப் பயன்படுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு -இந்திய நீதிமன்றங்கள்


Source : https://ta.vikaspedia.in/e-governance/baaba4bc1baeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b87ba3bc8bafba4bb3-b9abc7bb5bc8b95bb3bcd/baabafba9bcdbaebbfb95bc1-b87ba3bc8bafbb5bb4bbfb9abcd-b9abc7bb5bc8b95bb3bcd/b89b9abcdb9a-ba8bc0ba4bbfbaeba9bcdbb1ba4bcdba4bbfbb2bcd-b87ba3bc8baf-bb5bb4bbf-bb5bb4b95bcdb95bc1-ba4bbeb95bcdb95bb2bcd