செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி

 

29 8 2022வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை வர்த்தகத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கின.

சென்செக்ஸ்

மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 861.25 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டிஸ் லேப் பங்குகள் அதிகப்படியான வீழ்ச்சியை சந்தித்தன.
பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்டுள்ள 30 பங்குகளில் 6 பங்குகள் மட்டுமே லாபத்தில் வணிகமாகின. அவை, ஏசியன் பெயிண்ட்ஸ், இந்துஸ்தான் யூனிலிவர், ஐடிசி, மகிந்திரா அண்ட் மகிந்திரா, நெஸ்லே மற்றும் மாருதி சுகுதி உள்ளிட்ட பங்குகள் ஆகும்.

நிஃப்டி

தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் பிரிட்டானியா, கோல் இந்தியா, ஹீரோ மோட்டோ கார்ப், ஏசியன் பெயிண்ட்ஸ், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் பங்குகள் லாபத்திலும் அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட பங்குகள் நஷ்டத்திலும் வணிகமாகின.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் நிஃப்டி 246 (1.40%) புள்ளிகள் வரை சரிவை கண்டு 17312.90 எனவும், தேசிய பங்குச் சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 861.25 (1.46%) வரையும் வீழ்ச்சி கண்டு காணப்பட்டது.

source https://tamil.indianexpress.com/business/stock-market-today-29-august-2022-top-gainers-and-losers-502057/