செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

தமிழக மீனவர்கள் 9 பேர் துப்பாக்கி முனையில் கைது


கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி துப்பாக்கி முனையில் நாகை மீனவர்கள் துப்பாக்கி முனையில் கைது நாகப்பட்டினத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், 9 மீனவர்கள் கடந்த 20ம் தேதி நள்ளிரவு நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீனவர்கள் இன்று காலை மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது முல்லைத்தீவுபகுதியில் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி துப்பாக்கி முனையில் மீனவர்களை கைது செய்துள்ளனர். படகில் இருந்த அக்கரைப்பேட்டை கலையரசன், சஞ்சிகண்ணு, ஆனந்த், கமலநாதன், ராஜா, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்த ரீகன், பிரவீன் ஆகாஷ் உள்ளிட்ட 9
மீனவர்களை கைது செய்து, அவர்களது விசைப்படகையும் படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனை அடுத்து இலங்கை திரிகோணமலை துறைமுகத்திற்கு மீனவர்களையும் படகையும் அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்களையும், படகையும் மீட்டுத் தருமாறு மீனவர்கள் அரசுக்குகோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து நாகை காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையாள் கைது செய்யப்பட்டு சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


source https://news7tamil.live/9-tamil-nadu-fishermen-arrested-at-gunpoint.html