செவ்வாய், 17 நவம்பர், 2015

இங்கிலாந்து வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர்.



சுரேஷ் கோவர், பிரபல இங்கிலாந்து
வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர்.
'Awaaz Network' என்னும் அமைப்பின்
நிறுவனர் மற்றும் TMG (The Monitoring Group)
அமைப்பின் இயக்குனர். 25
ஆண்டுகளுக்கு மேலாக உலகத்தில்
நடக்கும் பல்வேறு இனவெறி மற்றும்
மனித உரிமை மீறல்களுக்கு எதிராக
குரல் கொடுத்து வருபவர்.
சில வாரங்களாக நரேந்திர மோடியின்
நிம்மதியான தூக்கத்தை கெடுத்து
வருபவர்.
இந்துத்துவத்தின் கொடூரத்தை
வெகுஜன மக்களுக்கு உணரும்
வகையில் மிகவும் துணிச்சலாக
இங்கிலாந்து பாராளுமன்ற கட்டடத்தின்
மீது மோடியைக் கொலைவாளுடன் 'ஓம்'
வடிவம் ஜெர்மனி பாசிசத்தின்
குறியீடான 'ஸ்வஸ்டிக்'-காக மாறும்
வகையில் முப்பட்டக பிம்பத்தை (3D Image)
பளிச்சீட்டுச்சைகை (Flash) செய்து
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இங்கிலாந்தில் உள்ள பல்வேறு
அமைப்புகளை ஒருங்கிணைத்து
நரேந்திர மோடிக்கு எதிராக லண்டனில்
பிரதமர் அலுவலகம் மற்றும்
பாராளுமன்ற சதுக்கத்தில் மிகப்பெரிய
ஆர்ப்பாட்டத்தை நடத்தியதில்
பெரும்பங்கு வகித்தவர்.
18 வயதில் இனவெறிக்கு எதிராக
தொடங்கிய போராட்ட வாழ்க்கையை
பல்வேறு பகுதிகளில் பல்வேறு தரப்பட்ட
மக்களுக்காக குரல் கொடுத்து
வருபவர்.
2002-ல் குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட
இங்கிலாந்து பிரஜைகளான சயீத், ஷகீல்
மற்று முஹம்மத் அஸ்வத்
ஆகியோருக்காக "Dawood Family Justice
Campaign" மூலம் பல ஆண்டுகளால
சட்டப்பூர்வமாக குரல் கொடுத்து
தொடர்ந்து வருபவர்.
சுரேஷ் கோவரின் போராட்ட
வாழ்க்கையைப் பற்றி பிபிசி வந்த
ஆவணம்: http://www.bbc.co.uk/news/
magazine-33725217 .
இதுபோன்று சுரேஷ் கோவரின்
'மவுனமான' புரட்சிகளைப் பற்றி
நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
கடந்த வாரத்தில் லண்டனில் பாராளுமன்ற
சதுக்கத்தில் மோடிக்கு எதிராக நடந்த
ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ் கோவருடன்
புகைப்படம் எடுத்துக்கொண்ட அந்த
மகிழ்ச்சியான தருணம்.
இன்ஷா அல்லாஹ். நேரம்
கிடைக்கும்போது விரிவாக மேலதிக
தகவல்களுடன் எழுத முயற்சிக்கிறேன். வாட்ஸ்அப் தகவல்


Jeddah TNTJ's photo.

Related Posts: