திங்கள், 27 நவம்பர், 2017

தமிழக கேரள எல்லையில் அதிரடிப்படையினர் கண்காணிப்பு November 27, 2017

Image

தமிழக கேரள எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் உள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து அப்பகுதியில் அதிரடிப்படையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.  

கர்நாடக மாநிலம் கூர்க் வனப்பகுதியில் முகாம் அமைத்து பயிற்சி பெற்ற மாவோயிஸ்ட்டுக்கள் 45 பேர் தாக்குதல் நடத்த தயார் நிலையில் உள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். 

இந்நிலையில் அப்பகுதியில் அதிரடிப்படையினர் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கண்காணிக்க வாகன சோதனை, கூடுதல் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தம், தீவிர ரோந்து பணி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர். 

அதுமட்டுமின்றி இரு மாநில எல்லையோரத்தில் உள்ள மலை கிராமங்களில் மாவோயிஸ்ட்டுக்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு உடனடியாக தகவல் தெரிவிக்க பழங்குடியின மக்களிடம் போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.