வெள்ளி, 24 நவம்பர், 2017

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விவசாயிகள் போராட்டம்! November 24, 2017

Image

கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

டெல்லியிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த விவசாயிகள் மனித எலும்புகள், ஏர்கலப்பை உள்ளிட்டவற்றை அணிந்துகொண்டு முழக்கமிட்டனர். அப்போது, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் நகைகளை ஏலம் விடுவதை தடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். 

தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிரதமர் மோடிக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.