புதன், 29 நவம்பர், 2017

காங்கிரஸ் அரசின் சாதனைகளைத் தான் இவான்கா புகழ்ந்ததாக ட்விட்டரில் சிதம்பரம் கருத்து November 29, 2017

Image

இந்தியாவில் 13 கோடிக்கும் மேற்பட்டோர் வறுமை நிலையில் இருந்து மீட்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா குறிப்பிட்டுப் பேசியது காங்கிரஸ் அரசின் சாதனை என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்ற இவான்கா, மோடியையும், இந்திய அரசின் செயல்பாடுகளையும் புகழ்ந்து பேசினார். அப்போது, இந்தியாவில் 13 கோடிக்கும் மேற்பட்டோர் வறுமை நிலையில் இருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில், ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் 13 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக இவான்கா பேசியது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனை தான் எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

மேலும், 2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நடவடிக்கையால் வறுமையில் இருந்து மீட்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை 14 கோடிக்கும் மேல் என்றும் சிதம்பரம் விளக்கமளித்துள்ளார்.