புதன், 29 நவம்பர், 2017

தமிழக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்...! November 29, 2017

Image

தமிழக ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் என்கிற புதிய பதவி தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பதவியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலாளராக இருந்து வரும் ரமேஷ் சந்த் மீனா மாற்றப்பட்டு தமிழ்நாடு தொழில்மேம்பாட்டுக் கழகமான டிட்கோவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆளுநரின் முதன்மைச் செயலாளர் என்கிற பதவிக்குப் பதிலாக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் என்கிற பதவி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த பதவிக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் மாநிலங்களுக்கிடையேயான குழுவின் முன்னாள் ஆலோசகருமான ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆளுநரின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜகோபாலுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உரிய அந்தஸ்தும் பொறுப்பும் அளிக்கப்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பதவி ஏற்கும் காலத்திலிருந்து ஒரு வருடம் அல்லது தேவை உள்ளவரை இதில் குறைந்த கால அளவோ அதுவரை ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் என்கிற பதவி நடைமுறையில் இருக்கும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
source: http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/29/11/2017/rajagopal-ias-appointed-additional-chief-secretary-tamil-nadu-governor

Related Posts: