Home »
» உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து நீலகிரியில் தீவிர பாதுகாப்பு! November 24, 2017
தமிழகம் - கேரளா - கர்நாடக எல்லையில் மாவோயிஸ்ட்கள் அசம்பாவித செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கக்கநல்லா, நாடுகாணி, தொரப்பள்ளி, பாட்டவயல், கெத்தை உள்பட 13 சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளபட்டு வருகிறது. கடந்தாண்டு நவம்பர் 24-ந்தேதி கேரளா மாநிலம் வயநாடு வனப்பகுதியில் தங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள் மீது கேரளா காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், அந்த இயக்கத்தை சார்ந்த 3 பேர் கொல்லபட்டனர். இந்த சம்பவம் நடைபெற்று ஓராண்டு ஆவதால் அதற்கு பழிவாங்கும் வகையில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சார்ந்தவர்கள் அசம்பாவித செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில எல்லைகளில் காவல் துறையினர் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Posts:
தேர்தல் ஆணையம் மாநில அரசோடு இணைந்து ஒருதலைபட்சமாக செயல்படுகிறது - நல்லகண்னு April 05, 2019
தேர்தல் ஆணையம் மாநில அரசோடு இணைந்து ஒருதலைபட்சமாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்னு குற்றம் சாட்டியுள்ளார்.… Read More
தேர்தல் ஆணையமும், வருமான வரி துறையும் எங்கள் குடும்பத்தை தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறது:குமாரசாமி April 05, 2019
இந்திய தேர்தல் ஆணையமும், வருமான வரி துறையும் தங்கள் குடும்பத்தை தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றஞ்சாட்டிய… Read More
எட்டு வழிச்சாலைக்கு தடை கோரிய வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு! April 06, 2019
சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் வரும் 8ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
சென்னையிலிருந்து - சே… Read More
இந்து முன்னணியினருக்கும், திராவிடர் கழகத்தினருக்கும் இடையே கடும் மோதல்! April 05, 2019
திருச்சியில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், இந்து முன்னணியினருக்கும், திராவிடர்கழகத்தினருக்கும் இடையே ம… Read More
கி.மு.வில் தாலமைக் பேரரசு காலத்தில் புதைக்கப்பட்ட கல்லறைகளை கண்டுபிடித்த எகிப்து தொல்லியல் அதிகாரிகள்! April 06, 2019
பண்டைய கிரேக்கத்தின், தாலமைக் பேரரசு காலத்தில் புதைக்கப்பட்ட பழங்கால கல்லறைகளை எகிப்திய தொல்பொருள் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
த… Read More