Home »
» கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை திடீர் குறைவு! November 28, 2017
சுனாமி பீதியால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஒரு சில கடலோர மாவட்டங்களை மீண்டும் சுனாமி தாக்க வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனைத் தொடர்ந்து சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகையும், ஐயப்ப பக்தர்களின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து அம்மனை தரிசித்துவிட்டு, திருவேணி சங்கமத்தில் நீராடிச் செல்வது வழக்கம். என்றபோதிலும், சுனாமி பீதி காரணமாக சபரி மலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், 4 ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் ஏதேனும் ஒரு இயற்கை பேரழிவு நடைபெறும் என்ற வதந்தி பரவிவருவது குறிப்பிடத்தக்கது.
Related Posts:
நதிநீர் இணைப்பு என்பதை நாம் நிச்சயமாக செயல்படுத்த முடியாது" : தேசிய தண்ணீர் குழுமம் April 13, 2019
நதிநீர் இணைப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் பா ஜனதா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சாத்தியமில்லா திட்டங்களை கூறுவதாகவும் தேசிய த… Read More
ஆந்திரா, தெலங்கானாவில், சுமார் 8 கோடி மக்களின் ஆதார் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு! April 15, 2019
ns7.tv
ஆந்திரா, தெலங்கானாவில், சுமார் 8 கோடி மக்களின் ஆதார் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர அரசின் தக… Read More
நாட்டிலேயே அதிக பணம் வங்கியில் டெபாசிட் செய்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி! April 15, 2019
source ns7.tv
நாட்டிலேயே அதிக பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து வைத்துள்ள கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ர… Read More
"மத்தியில் மீண்டும் மோடி வரக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்" : குஷ்பு April 15, 2019
source ns7.tv
கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கொட்டாரம், சுசீந்திரம் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் கட்… Read More
சவுக்கடி பேச்சு - தமிழில்.
… Read More