புதன், 29 நவம்பர், 2017

அனைத்து மணல் குவாரிகளையும் மூட உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு November 29, 2017

Image

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் இன்று முதல் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது, 

➤மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்கலாம். 

➤தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை இன்று முதல் 6 மாதங்களுக்குள் முழுவதுமாக மூட வேண்டும். 

➤புதிதாக எந்த மணல் குவாரிகளையும் திறக்க கூடாது. 

➤வருங்கால தமிழக சந்ததியின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

➤சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

➤வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் மூலம், தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். 

➤மணல் இறக்குமதிக்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும். 

➤சோதனை சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களை கண்காணிப்பு கேமரா பொருத்தி மணல் கடத்தல் குறித்து கண்காணிக்க வேண்டும். 

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மணல் குவாரிகள் மீதான உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தடை காரணமாக கட்டுமான தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என்று லாரி உரிமையாளர் சங்கங்களும், கட்டுமான சங்கங்களும் எச்சரித்துள்ளன.