வியாழன், 30 நவம்பர், 2017

அரசு உதவிகோரும் தேசிய சிலம்பாட்ட மாணவி! November 29, 2017

Image

தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளுக்கு தேர்வாகி உள்ள புதுக்கோட்டை மாணவி, தமிழக அரசு தேவையான உதவிகள் வழங்கினால், பல்வேறு சாதனைகள் புரிய முடியும் என தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி வெண்ணிலா, மாவட்ட அளவிலான பல்வேறு சிலம்பாட்டப் போட்டிகளில் பங்கேற்று தொடர் வெற்றிகளை குவித்துள்ளார்.

இந்நிலையில் திருச்செங்கோட்டில் நடந்த மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டு, சாம்பியன் பட்டம் வென்றார். தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் பங்கேற்க அவர் தேர்வாகி உள்ளார்.

விவசாயக் குடும்பத்தை சேர்ந்த வெண்ணிலா, ஏழ்மையால் மிகவும் கஷ்டப்படுகிறார். எனவே  தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகள் புரிய, தமிழக அரசு தேவையான உதவிகள் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.