ஞாயிறு, 31 மார்ச், 2019

கோவை சிறுமி கொலை வழக்கு : ஒருவர் கைது...! போலீசார் தீவிர விசாரணை! March 31, 2019

Image
கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 
கோவை பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 25-ம் ஆம் தேதி காணாமல் போனநிலையில் அடுத்த நாள் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பத்து தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார், சிறுமியின் வீடு அருகே உள்ள தமது தாத்தா வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இவர் ஏற்கனவே சிறுமியை இருமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
சிறுமி இறந்த நிலையில் மீட்கப்பட்டபோது அவர் உடலில் மூடப்பட்டு கிடந்த டீ சர்ட்டும் சந்தோஷ் குமாருடையது தான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிறுமி காணாமல் போன இரவு சந்தோஷ்குமாரின் பாட்டியும் உயிரிழந்துள்ளார். சிறுமியின் உடலை பாட்டியின் வீட்டில் தான் சந்தோஷ்குமார் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாரின் வயது 34 என்பதும், மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதும் தெரியவந்துள்ளது.

source ns7.tv

Related Posts:

  • தெரிந்தது கொல்ளவும்......... Read More
  • Hadis அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவரு… Read More
  • இறால் வளர்ப்பு! - கிராம புற மக்களுக்கு ஏற்ற தொழில் நல்வருமானம் தரும் இறால் வளர்ப்பு! ஒரு ஏக்கரில் 1,650 கிலோ இறால்! 1) தாராளமாக குஞ்சுகள் கிடைக்கும்! 2) 100 நாட்களில் வருமானம்! 3) கிலோ 500 -700 ரூ… Read More
  • அஞ்சலகத்தின் -ஒப்புகை அட்டை வரவில்லையா ஒப்புகை அட்டை வரவில்லையா..... அப்படி நமக்கு ஒப்புகை அட்டை வந்தாலும் அதில் உரிய அலுவலகத்தின் முத்திரை. அதிகாரி கையெப்பம்.தேதி இல்லையா.... அஞ்சலகத்த… Read More
  • அல்குர்ஆன் மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்த… Read More