செவ்வாய், 12 மார்ச், 2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: திருவாரூரில் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்! March 12, 2019

Image
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து, மன்னார்குடி அரசு கலைக் கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பொள்ளாச்சியில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை மயக்கி, அவர்களை ஒரு கும்பல் ஆபாசமாக படம் பிடித்து, மிரட்டி பணம் பறித்த சம்பவம், மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமையிலான 4 பேர் கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சிலர் காப்பாற்ற முயற்சிப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ராஜகோபால சுவாமி அரசினர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் வலியுறுத்தினர்

source: ns7.tv