புதன், 20 மார்ச், 2019

ராஜபாளையம் பகுதியில் நில அதிர்வு; பொதுமக்கள் அச்சம்! March 19, 2019


Image
ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். 
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம், தளவாய்புரம்,   கொல்லகொண்டான், சுந்தரராஜபுரம், கம்மாபட்டி, நக்கனேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் 2 முறை பலத்த வெடி சப்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். 
இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னையில் உள்ள பேரிடர் மேலாண்மை இயக்குனருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறிய அளவில் அதிர்வு உணரப்பட்டது உண்மை தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
source ns7.tv