செவ்வாய், 26 மார்ச், 2019

நாடாளுமன்றத் தேர்தலில் இன்றுடன் நிறைவடைகிறது வேட்பு மனு தாக்கல்! March 26, 2019

Image
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் நேற்று வரை 604 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் புதுவையில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் அடுத்த மாதம் 18ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அதே நாளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரண்டு தேர்தலுக்குமான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ந்தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் நேற்றுவரை 604 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 
சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் 230 பேர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. நாளை வேட்பு மனு பரிசீலனை நடைபெற உள்ளது. 29ம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிந்த பின்னர் இறுதிக் கட்ட வேட்பாளர் பட்டியல் அன்றே வெளியிடும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

credit ns7.tv