ஞாயிறு, 31 மார்ச், 2019

சாலையோரம் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கிய காவலர்! March 31, 2019

Image
சென்னையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை காவலர் ஒருவர் அடித்துநொறுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 
சென்னை தலைமைச்செயலகத்ததை அடுத்துள்ள போர் நினைவுச் சின்னம் எதிரில் சாலையோரமாக இருசக்கர வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது ரோந்து வாகனத்தில் வந்த காவலர் ஒருவர், கம்பால் இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்தார். பின்பு இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் ஓடி வந்து வாகனத்தை அங்கிருந்து எடுத்து சென்றார். அவர் காவலருக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. 
இது தொடர்பாக கோட்டை காவல்துறையிடம் கேட்டபோது, அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவர் கல்லூரி மாணவர் என்றும், சத்யா நகரில் கஞ்சா கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர் வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். அவரை பலமுறை கண்டித்தும் கேட்காததால் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

source ns7.tv