செவ்வாய், 12 மார்ச், 2019

குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்! March 12, 2019

Image
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  
பொள்ளாச்சியில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுடன் பழகி, அவர்களை சித்ரவதை செய்து ஆபாசமாக படம் பிடித்த வழக்கில், திருநாவுக்கரசு என்பவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், திருநாவுக்கரசு உள்ளிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவ, மாணவிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அதன்படி, திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரையும், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

source ns7.tv