செவ்வாய், 19 மார்ச், 2019

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : பொள்ளாச்சி ஜெயராமனிடம் தொடர் விசாரணை! March 19, 2019

Image
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனிடம், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 மணிநேரம் தொடர் விசாரணை நடத்தினர். 
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக தம் மீதும் தமது குடும்பத்தினர் மீதும் சிலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பரப்பி வருவதாகக்கூறி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக ஜெயராமனிடம் அவரது வீட்டில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், 3 மணிநேரம்  விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையின்போது, தம் மீது யார் யார் தவறான கருத்துகளை பரப்பினார்கள் என்பது குறித்த தகவலை போலீசாரிடம் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தாக கூறப்படுகிறது.

credit ns7.tv