செவ்வாய், 26 மார்ச், 2019

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்....’ அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ராகுல்! March 26, 2019

Image
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் 6000 செலுத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். "குறைந்தபட்ச உத்தரவாத திட்டத்தின் கீழ் 25 கோடி பேருக்கு ஆண்டுக்கு ரூ.72,000 நிதியுதவி கிடைக்கும் என்று தெரிவித்தார். இதன் மூலம் ஐந்து கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுவர் என்றும் அவர் கூறினார். இதுபோன்ற திட்டம் உலகில் எங்கும் இல்லை என்றும் ராகுல் காந்தி அப்போது குறிப்பிட்டார். நாட்டில் 20% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதாகவும் ராகுல் கூறினார். 
credit ns7.tv