வெள்ளி, 22 மார்ச், 2019

வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான கல்லூரியில் பணியிடங்கள் நிரப்புவதில் முறைகேடு? March 22, 2019

Image
வக்ஃபு வாரிய கல்லூரி முறைகேடு தொடர்பாக, சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
 
சென்னை மண்ணடியில் வக்ஃபு வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு மதுரையில் இருந்து வந்த சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான கல்லூரி மதுரை கே.கே.நகரில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லதோர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 
இதில் முறைகேடு நடந்ததாக மதுரை சின்னத்தெருவை சேர்ந்த சர்தார் பாஷா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் விசாரணை நடத்தி 6 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் நேற்று  வக்ஃபு வாரிய தலைவர் அன்வர் ராஜாவை ராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சி.பி.ஐ அதிகாரிகள் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து வக்ஃபு வாரிய அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. 
credit ns7.tv