சனி, 30 மார்ச், 2019

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்! March 30, 2019


Image
ஐஎன்எஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் இதற்கு உதவியதாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுவருகிறார். 
இந்த நிலையில், ஐஎன்எஸ் மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் 22 கோடியே 28 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

credit  : ns7.tv