சனி, 16 மார்ச், 2019

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக புதிய பிரிவு உருவாக்கம்! March 16, 2019

Image
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரணை மேற்கொள்வதற்காக புதிய பிரிவை, தமிழக காவல்துறை உருவாக்கியுள்ளது.  
இந்த விசாரணை குழு ஏடிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஏடிஜிபி அருணாச்சலம் தலைமையில் இந்த விசாரணை பிரிவு செயல்பட உள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வன்கொடுமைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 
நடக்கும் கொடுமைகள் உள்ளிட்டவற்றை இந்த தனிப்பிரிவு கண்காணிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த விசாரணை பிரிவு சிபிஐ மற்றும் இன்டர்போல் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு குற்றவாளிகள் குறித்த புதிய தொகுப்பை உருவாக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

source ns7.tv