புதன், 27 மார்ச், 2019

கொள்கை பிடிக்காததால் பிரசாரம் செய்யவில்லை - சுப்பிரமணியன் சுவாமி March 27, 2019

Image
பாஜகவின் கொள்கை பிடிக்காததால் பரப்புரை செய்யவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரனுக்கு பொதுச்சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பது தவறு என்றும், தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரனுக்கு நிலையான சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் கூறினார்.
பாஜக தனித்துப் போட்டியிடுவதையே தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட தடையாக இருந்தது துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் ப.சிதம்பரம் எனவும் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார்.

source: ns7.tv