புதன், 20 மார்ச், 2019

பொள்ளாச்சி சம்பவம்: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு கண்டனம்! March 20, 2019

Image
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததை ரத்து செய்யக்கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் விடியவிடிய உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து  தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் என போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட சட்ட கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததை திரும்ப பெற வலியுறுத்தி, சட்டக்கல்லூரி மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மாணவர்கள் மீதான வழக்கை உடனடியாக ரத்து செய்ய கோரியும், கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் மாணவர்கள் முழக்கமிட்டனர். இந்நிலையில் மாணவர்கள் போராட்டம் எதிரொலியால் சட்டக்கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
source ns7.tv