புதன், 13 மார்ச், 2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழகம்! March 13, 2019

Image
பொள்ளாச்சி கொடூர சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை கண்டித்து திருவண்ணாமலையில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் திரண்ட 500க்கும் மேற்பட்ட அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு இஸ்லாமிய நாடுகளில் வழங்கப்படுவது போல் கடுமையான தண்டனைகளை அளிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர். 
தமிழகம் சுதந்திர நாடு என கூறிக்கொண்டிருக்கும் நிலையில், தினம் தினம் பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகி வருவதாக மாணவிகள் வேதனை தெரிவித்தனர். இது போன்ற சம்பவங்களுக்கு அஞ்சியே பெண்களுக்கு சிறு வயதிலே பெற்றோர் திருமணம் செய்து வைப்பதாகவும் எனவே குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்

credit ns7.tv