புதன், 27 மார்ச், 2019

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த நபர் கோவை நீதிமன்றத்தில் சரண்! March 26, 2019

Image
பொள்ளாச்சி பாலியல் விவாகரத்தில் புகார் தெரிவித்த பெண்ணின்  அண்ணனைக் தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் என்பவர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவாகரத்தில் குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் புகார் தெரிவித்த பெண்ணின் அண்ணனை கும்பல் ஒன்று கடந்த மாதம் தாக்கியது. இதில் தொடர்புடைய பாபு ,செந்தில் ,பார்நாகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். 
ஆனால் இதில் தொடர்புடைய மணிவண்ணன் என்பவர் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்துவந்தார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார்.  இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய கோவை தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி 8 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
source ns7.tv