புதன், 15 ஜனவரி, 2020

உழைக்கும் மக்களே தங்கள் கையில் முரசொலியை வைத்திருப்பார்கள்

Image
உழைக்கும் மக்களே தங்கள் கையில் முரசொலியை வைத்திருப்பார்கள் என, திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 
துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சோ மறைவுக்கு பிறகும் துக்ளக் இதழை, குருமூர்த்தி வீரியத்துடன் நடத்துவதாக பாராட்டினார் தொடர்ந்து பேசிய அவர் கையில் முரசொலியை வைத்திருந்தால் அவர் திமுக காரர் என்றும், துக்ளக்கை வைத்திருந்தால் அவர் அறிவாளி எனவும் கண்டுபிடித்துவிடலாம் என அவர் தெரிவித்தார். 
இந்த கருத்து சமூகவலைதளங்களில் பேசுபொருளானது, இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக எம்.பி இளங்கோவன் உழைக்கும் மக்களே தங்கள் கையில் முரசொலியை வைத்திருப்பார்கள் என பதில் அளித்துள்ளார். 
credit ns7.tv