ஞாயிறு, 26 ஜனவரி, 2020

அரசுப் பேருந்துக்கு சுங்க கட்டணம் கேட்டதால் அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச் சாவடி!

Image
செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்துக்கு சுங்கக் கட்டணம் கேட்ட விவகாரம் முற்றியதால், பயணிகள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி நாசம் செய்தனர். 
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி சென்ற அரசுப் பேருந்துக்கு, செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வழங்குமாறு கேட்டதால், ஓட்டுநருக்கும் சுங்கச்சாவடி ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டது. 
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஓட்டுனர் அரசுப் பேருந்தை சுங்கச்சாவடியின் குறுக்கே நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், நூற்றுக்கணக்கான பேருந்துகள் செல்ல முடியாமல் 5 மணி நேரமாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டன. 
Chengalpattu Toll plaza
இந்த பேருந்துகளில் இருந்து இறங்கிய பயணிகள், சுங்கச் சாவடியை அடித்து நெறுக்கி சூறையாடியனர். இதையடுத்து, அங்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலவரம் செய்தவர்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். சுங்கச்சாவடியில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள்  தரக்குறைவாக நடந்துகொள்வதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 
credit ns7.tv