சனி, 18 ஜனவரி, 2020

பெரியார் குறித்த பேச்சுக்கு விரைவில் வருத்தம் தெரிவிப்பார்

Image
பெரியார் குறித்த தனது பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் விரைவில் வருத்தம் தெரிவிப்பார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
சென்னை போரூரில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். குடியுரிமை சட்டம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மாறுபட்ட கருத்துகளை கூறி மக்களை குழப்பி வருவதாகவும், இச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் இரண்டாவது விடுதலை போராட்டத்திற்கு நிகரானது என்றும் தெரிவித்தார்.
திருச்சியில் பிப்ரவரி 15ம் தேதி தேசம் காப்போம் என்ற பேரணியை தாம் நடத்தவுள்ளதாக தெரிவித்த திருமாவளவன், சமூக நீதி கோணத்திலிருந்து பெரியாரை ரஜினி பார்க்க தொடங்கினால், அவரின் போராட்டங்களை புரிந்து கொள்வார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். 

credit ns7.tv