ஞாயிறு, 26 ஜனவரி, 2020

திமுக முதன்மை செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமனம்!

Image

திமுகவின் முதன்மைச்செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுகவில் பொதுச்செயலாளருக்கு உதவும் வகையில் முதன்மைச்செயலாளர் பொறுப்பு கடந்த 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது அந்த பொறுப்பிற்கு துரைமுருகன் நியமிக்கப்பட்ட நிலையில், துரைமுருகன் கட்சியின் பொருளாளராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, டி.ஆர். பாலு நியமிக்கப்பட்டார். கட்சி நிர்வாகிகளுக்கு இடையேயான உட்கட்சி பூசல்களை பேசி தீர்க்கக்கூடிய பொறுப்பாக உள்ள நிலையில், அந்த பொறுப்பில் இருந்த டி.ஆர் பாலு விடுவிக்கப்பட்டுள்ளார். 
அவர் நாடாளுமன்ற குழு தலைவராக உள்ளதால் விடுவிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். டி.ஆர். பாலு வசம் இருந்த பொறுப்புக்கு, திருச்சி தெற்கு மாவட்டச்செயலாளராக உள்ள கே.என். நேரு நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் குறித்த அறிவிப்புகளும் அடுத்து வரும் நாட்களில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
credit ns7.tv