திங்கள், 27 ஜனவரி, 2020

CAA-க்கு எதிராக கேரளாவில் மனித சங்கிலி போராட்டம்...!

Image
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கேரளாவில் சுமார் 700 கிலோமீட்டர் தூர மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றன. இச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கேரளா சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதனை அடுத்து, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல அரசியல் தலைவர்களும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், குடியரசு தினத்தன்று, களியக்காவிளையில் இருந்து காசர்கோடு வரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. 
கேரளாவில் மனித சங்கிலி போராட்டம்
சுமார் 700 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில்., கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றார். இந்த போராட்டத்தில் 70 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.  
credit ns7.tv