சனி, 25 ஜனவரி, 2020

சிலரது தூண்டுதலின் பேரிலேயே என் மீது தாக்குதல் நடத்த முயற்சி: ஓ.பி.ஆர்

தேனி மாவட்டம் கம்பத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரின் காரை இஸ்லாமியர்கள் வழிமறித்தனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்ததற்கு எதிராக அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பியதுடன் ரவீந்திரநாத் குமாருக்கு கருப்பு கொடியும் காட்டினர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.