செவ்வாய், 21 ஜனவரி, 2020

தொண்டர்களால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட அவல நிலை!

Image
டெல்லியில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய சென்றபோது தொண்டர்களின் கொண்டாட்டத்தால் தாமதமாக சென்ற அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திருப்பி அனுப்பப்பட்டார்.
டெல்லியில் சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 8ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடந்து வருகிறது. இதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்று ஊர்வலமாக சென்றார். அப்போது வழிநெடுங்கும் இருந்த தொண்டர்கள் அவரை, உற்சாகமாக வரவேற்றனர். இதனால் வேட்பு மனு தாக்கல் செய்ய கெஜ்ரிவால் தாமதமாக சென்றார்.  வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை பிற்பகல் 3 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் ஆனால் கெஜ்ரிவால் தாமதமாக சென்றதால் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் திரும்பினார். 
இது குறித்து பேசியுள்ள அவர், தனது தொண்டர்களை விட்டுவிட்டு தான் எப்படி செல்வது? என்றும், இதனால் தனது வேட்புமனுவை நாளை தாக்கல் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.தொண்டர்களின் கொண்டாட்டத்தால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால், வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான நாளைய தினம் சரியான நேரத்திற்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

credit ns7.tv